1.பாதுகாத்தல். புலி புறங் காக்கும் குருணை போல (புறநா.42,10). நல்லொழுக்கம் காக்கும் திருவொத்தவர் (நாலடி.57). தன்மண் காத்தன்று (மணிமே.23,17). சொற்பகர்ந் துலகங் காக்கும் (சூளா.67). விரிநீருலகங் காப்பான் (திருக்கோவை 312). மறங்கடிந்து அரசர் போற்ற வையகங் காக்கும் நாளில் (பெரயபு.1,3,17). யான்படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்லனாவேன் (கிருவிளை.பு. 57, 50). படுதிரை வையம் காக்கும் (செ.பாகவத.62). எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே (தாயுமா.பா. 43,14). கண்ணை இமை இரண்டும் காப்பது போல் (பாரதி கண்ணன்.4,46).
2. காவல் செய்தல். கொடிச்சி காக்கும் பெருங்குரல் (ஐங்.296). சிறை காக்குங் காப்பு எவன்செய்யும்(குறள்.57). சாரல் தினை காத்திருந்தேம் யாம் (ஐந்.ஐம்.14). காப்பினும் பெட்டாங்கு ஒழுகும் பிணை இலி(நான்மணிக்.92). பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி (சூளா.102). கூர் வளைவாய்ப் புள்ளின் தவமுடியப் புனமே இவள் காத்தது(அம்பி. கோவை 94). ஊரைக் காக்கும் என்பது காக்கப்படும் பொருள் மேல் வந்தது (கொல். சொல்.7- தெய்வச்.). வியன் மலை விடலை விழுப்புண் காப்பவும் (இலக்.வி.615).
3. தடுத்தல். செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள்.301). காக்கை கைத்தடி கொண்டு காத்தும் (சூளா.1851). நீ அன்று காத்தது இயம்புகவே (இயற். இரண்டாம் திருவந்.10). கணம் ஏயும் காத்தல் அரிது (குறள்.29 மணக்.). கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் (கம்பரா.1,8,40). ஆர்அது காக்க வல்லார் (சிவராத்.பு.4,84)
4. பின்பற்றுதல். ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கங் காத்தல் (சீவக.1547). விரதங் காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும் (குறள். 41 பரிமே.). காப்பது விரதம் (ஆத்தி.33). அவன் நோன்பு காத்தான் (நாட்.வ.).